திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, அரச நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உரிய அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, தேசத்தின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புத்தாக்கம் மற்றும் அபிவிருத்தியில் கவனம் செலுத்தி, கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, அரச நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

திரிபோஷா நிறுவனத்தை அபிவிருத்தி செய்து அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு முன்னைய அரசாங்கங்கள் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே அதன் பலன்களை மக்களால் பெறமுடியாமல் போனதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையை மாற்றி மீண்டும் நாட்டு மக்களின் போசாக்கு தேவைகளை வழங்கும் செயலூக்கமான நிறுவனமாக திரிபோஷாவை மாற்ற தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.


திரிபோஷா நிறுவனத்தை கலைப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு, முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான மேம்பட்ட நிறுவனமாக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

MOHAMED SUTHAISY

Hello, I'm Faris Mohamed Suthaisy from Anuradhapura, Sri Lanka. I have diplomas in Information Technology, Web Design, and Computer Hardware Engineering, and I am skilled in professional phone & computer repair and web design . Currently, I'm pursuing a BTEC HND in Computing & Software Engineering at Pearson University. Additionally, I am the Owner and CEO of FAMILY MOBILE and SUNDAY BBC.

புதியது பழையவை

Reference for Result

Recent Post & News

نموذج الاتصال