வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டு: கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு

தடை செய்யப்பட்ட தரமற்ற கடற்றொழில் வலைகளை வழங்கியதோடு, அதற்கு அதிக வரி விதித்ததாக கூறி, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இதனால், பயனாளிகள் வழங்கப்பட்ட வலைகளை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து, உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 41 பயனாளிகளுக்கு வலைகள் வழங்குவதற்காக 8,50,000 ரூபாய் ஒதுக்கப்பட்டு, இந்த நிதியின் கீழ், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் வலைகளை கொள்வனவு செய்திருந்தது.

இதன்படி, வழங்கப்பட்ட வலைகள் தரக்குறைவானவை எனவும், அவற்றில் தங்கூசி கலந்திருப்பதால், மீன்பிடிக்க இவை தடை செய்யப்பட்டவை எனவும் பயனாளிகள் தெரிவித்திருந்தனர்.


தரம் கொண்ட “கப்பல் பீஸ்” எனப்படும் வலையை மட்டுமே பிரதேச செயலகமிடம் தெரிவித்திருந்ததும் அவர்கள் பாவனைக்குதவாத தரமற்ற வலைகளையே தந்துள்ளனர் என குற்றச்சாட்டியுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

MOHAMED SUTHAISY

Hello, I'm Faris Mohamed Suthaisy from Anuradhapura, Sri Lanka. I have diplomas in Information Technology, Web Design, and Computer Hardware Engineering, and I am skilled in professional phone & computer repair and web design . Currently, I'm pursuing a BTEC HND in Computing & Software Engineering at Pearson University. Additionally, I am the Owner and CEO of FAMILY MOBILE and SUNDAY BBC.

புதியது பழையவை

Reference for Result

Recent Post & News

نموذج الاتصال