தர்ம சக்தி அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய கலாநிதி மாதம்பஹம அஸ்ஸஜி தேரர் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சினேகபூர்வ விஜயமென்றை இன்று 07.012025 திகதி மேற்கொண்டு திணைக்கள பணிப்பாளர் M.S.M. நவாஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவது தொடர்பான பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் தர்ம சக்தி அமைப்பும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இணைந்து எதிர்காலத்தில் நாடலாவியரீதியில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தர்ம சக்தி அமைப்பின் நிறைவேற்று செயலாளர் மரியாதைக்குரிய பாதிரியார் அநுர பெரேரா, உதவி செயலாளர் சிவ ஸ்ரீ சிவ தர்சக சர்மா குருக்கள், பொருலாளர் அஷ்ஷேய்ஹ் A. N. M. பிர்தௌஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஜனாப். ரிஸான் ஹுஸைன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான ஜனாப். சுல்கிப் மௌலானா, ஜனாப். அஸாம் லத்தீப் ஆகியோருடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் M. S. அலா அஹமட், வக்ப் நியாய சபை செயலாளர் (பதில்) M. N. M. ரோஸன், திணைக்கள சகவாழ்வு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் அஷ்ஷேய்ஹ் A. M. றிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.