அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும்! வேதநாயகன் வலியுறுத்து!

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும் எனவும், அரசாங்கப் பணியாளர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையிலான, பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண அரசசேவை பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கையின்பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் முறைமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் இன்று (07.01.2025) இடம்பெற்றது.

“அரச பணியாளர்களின் சேவைகளை மேம்படுத்துவதற்கு பயிற்சிகள் அவசியமாகின்றன. காலத்துக்கு காலம் அரச பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதும் இதற்குத்தான்.


இம்முறை அதை அதிகமாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். வடக்கு மாகாண சபைக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்கும் இடையிலான உறவு நெருக்கமானது.

அவர்கள் இவ்வாறான பயிற்சிகளை மாத்திரமல்ல எமது மாகாணத்துக்கு பல்வேறு உதவிகளையும் செய்திருக்கின்றார்கள்”என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

MOHAMED SUTHAISY

Hello, I'm Faris Mohamed Suthaisy from Anuradhapura, Sri Lanka. I have diplomas in Information Technology, Web Design, and Computer Hardware Engineering, and I am skilled in professional phone & computer repair and web design . Currently, I'm pursuing a BTEC HND in Computing & Software Engineering at Pearson University. Additionally, I am the Owner and CEO of FAMILY MOBILE and SUNDAY BBC.

புதியது பழையவை

Reference for Result

Recent Post & News

نموذج الاتصال